districts

img

சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்க உரிமை கேட்டு போராடிவரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செங்கல்பட்டு மாவட்டத்தின் சார்பில் செங்கல்பட்டு ராட்டினம் கிணறு பகுதியில் சங்கத்தின் மாவட்ட தலைவர் மகாலட்சுமி தலைமையில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சங்க நிர்வாகிகள் , இ.சார்லஸ், ஏ.வரதன், வேம்புலி அம்மாள், பொ.விஜயகுமார், ஆர்.மாயவன், பே.அலோசியஸ் துரைராஜ், த.உதயசூரியன், ஜி.மேத்யூ, இரா.ஞானசேகரன், தீனதயாளன் உள்ளிட்ட பலர் பேசினர்.