சென்னை, டிச. 20 - மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் டீக்கடைகளுக்கு சிலிண்டர் வழங்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்கத்தின் 40 வது ஆண்டு பொதுப்பேரவை ஞாயிறன்று (டிச.20) கேரள சமாஜம் பள்ளியில் நடை பெற்றது. டீக்கடைகள், உணவகங்களுக்கு தொழிற்சாலை பிரிவின் கீழ் விலை நிர்ணயம் செய்து சிலிண்டர் வழங்கப்படு கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சிலிண்டர் விலை 1000 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, சமுதாய சமையல் கூடங்களாக செயல் படும் டீக்கடை, உணவகங்களுக்கு மானியமில்லா வீட்டு உபயோக சிலிண் டர் விலையில் வழங்க வேண்டும். 24 மணி நேரம் கடைகள் இயங்க லாம் என்ற ஒன்றிய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில், பேருந்து நிலை யங்கள், மருத்துவமனைகள் அருகில் டீக்கடைகள் நடத்த காவல்துறை கெடுபிடி செய்வதை கைவிட வேண்டும்,
உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெறுவது, புதுப்பித்தலை எளிமைப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தப் பேரவைக்கு சங்கத்தின் தலைவர் டி.ஆனந்தன் தலைமை தாங்கி னார். பொதுச் செயலாளர் இ.சுந்தரம் வரவேற்றார். ஆண்டறிக்கையை துணைத் தலைவர் வி.பி.விஜயன் சமர்ப்பித்தார். தீர்மானங்களை துணைத் தலைவர் கே.டி.கே.அரவிந்தன் வாசித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவர் ஜோதி லிங்கம், சென்னை ஓட்டல்கள் சங்க செயலாளர் பேரா.ஆர்.ராஜ்குமார், அமராவதி சிட்பண்ட் நிர்வாக இயக்கு நர் கே.ராதாகிருஷ்ணன், நவோதயா சிட்பண்ட் நிர்வாக இயக்குநர் நவோ தயா சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பேசி னர். சங்கத்தின் துணைத் தலைவர் எம்.பி.மணி நன்றி கூறினார்.