கடலூர், செப். 27- கடலூரில் தீபாவளி போனஸ் கேட்டு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் என்.முருகன், செயலாளர் எம். தண்ட பாணி முன்னிலை வைத்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், சுமை தூக்குவோர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் வி. சுப்புராயன், துணைத் தலைவர் ஆர். ஆள வந்தார், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆர்.பாபு, வி.திருமுருகன் உள்ளிட்ட பலர் பேசினர். மதுபான உற்பத்தி ஆலை நிர்வாகம் இறக்கு கூலி உயர்வை உடனே வழங்க வேண்டும், டாஸ்மாக் நிர்வாகம் தலை யிட்டு கோரிக்கை பெற்றுத் தர வேண்டும், மது பானங்கள் ஏற்று கூலியை தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.