districts

img

இந்திய வங்கி கிளை அலுவலகம் இடமாற்றம் முடிவு வாபஸ்

கிருஷ்ணகிரி,நவ.2- கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சூளகிரி வட்டம் உத்தனப்பள்ளியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நகரின் மையத்தில் இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இங்கு 1500 சுய உதவிக் குழுக்கள் 100 நாள் வேலை தொழிலாளர் கள்,முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள், மாற்றுத்திறனாளி கள்,சிறு குறு விவசாயிகள்,சிறு கடை வியாபாரிகள் பொதுமக்கள் என மொத்தம் 6000 பேர்  நீண்ட காலமாக வங்கி கணக்கு வைத்துள்ளனர். தற்போது இந்த வங்கியை வேறொரு கட்டிடத்திற்கு யாரோ ஒரு சிலரின் ஆதாயத்திற்காக 2 கிலோ மீட்டருக்கு அப்பால் சில வீடுகள் மட்டுமே உள்ள கிருஷ்ணா புரம் பகுதிக்கு மாற்ற இங்குள்ள நிர்வாகத்தினர் முடி வெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கியின் கிளை அலுவலகம் இடமாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படும் கிருஷ்ணாபுரம் பகுதிக்கு பேருந்து ஆட்டோ வசதி கள் எதுவும் இல்லை.இர வில் வங்கிக்கே பாதுகாப்பு இருக் காது. வங்கி இடமாற்றம் செய்தால் மாற்றுத்திறனாளிகள் வயதான வர்கள், தினக்கூலிகள் மினி பேருந்து கட்டணம், ஆட்டோவுக்கு என ரூ.50,100 தண்டமாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மேலும் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள உத்தனப்பள்ளி சுற்றி யுள்ள துப்புகானப்பள்ளி சானமாவு,சாமனப்பள்ளி,பீர்ஜேப்பள்ளி, அயர்ன் பள்ளி,கருக்கன அள்ளி ஆகிய 8 ஊராட்சிகளில் மக்கள் சார்பில் வங்கி இட மாற்றத்திற்கு ஆட்சேபனை தெரி வித்து நகருக்குள்ளேயே  வங்கி இருக்க வேண்டும் என்று கடந்த கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வங்கி மேலாளரிடம் மனு கொடுக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் வங்கி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நிர்வாகம் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் எம்.எம்.ராஜூ, முருகேசன் ஆகியோர் தலைமையில் இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாநில செய லாளர் பி.பெருமாள் மாவட்டச் செய லாளர் பிரகாஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சி வட்டச் செய லாளர் முனியப்பா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இள வரசன், மாதர் சங்க மாவட்ட தலைவர் சரஸ்வதி, மாவட்ட குழு உறுப்பினர் மாதேஸ்வரி, வழக்கறி ஞர் முரளி,விஜயகுமார், அமரேஷ், கே.எம்.ராமச்சந்திரன், கோபி கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் வங்கி மேலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், உத்தனப் பள்ளி இந்தியன் வங்கி கிளை இடமாற்றம் செய்வதை கைவிடு வதாக சங்கத் தலைவர்களிடம் வங்கி அதிகாரிகள் கடிதம் அளித்தனர்.  கோரிக்கை வெற்றி பெற்றதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.