விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரவிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ் அணைக்கட்டு மறுகட்டுமானம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர் திங்களன்று (நவ.25) ஆய்வு செய்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.இலட்சுமணன், அ.சிவா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கு.ஒம்சிவ சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.