கடலூர்,ஏப்.2- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி தொடங்கியது. மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. 5 கட்டமாக நடைபெற உள்ள நீச்சல் பயிற்சி வகுப்பு செவ்வாயன்று தொடங்கியது. முதல் கட்ட பயிற்சி வகுப்பில் சுமார் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சியாளர்கள், காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொருவருக்கும் 12 நாட்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப் படும்.