districts

img

கடலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் புயல் பாதுகாப்பு மையங்கள்

கடலூர், டிச.3- புயல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார். வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உரு வானதை யொட்டி கடலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னேற்பாடுபணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆகியோர் புயல் முன்னெச்சரிக்கை பணியினைஆய்வு மேற்கொண்டனர். கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரியில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான தற்காலிக தங்கு மிடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மாநகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் வள்ளி கந்தன் நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தேவனாம்பட்டினம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சொத்திக்குப்பம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையம் மற்றும் ராசாப்பேட்டை புயல் பாதுகாப்பு மையங்களில் மழை பாதிப்பின் போது பொதுமக்களை தங்க வைப்பதற்கு குடிநீர், ஜெனரேட்டர் வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் கனமழையால் மிக அதிக பாதிக்கக் கூடிய பகுதிகள், மித மாக பாதிக்கக்கூடிய பகுதிகள், குறை வாக பாதிக்கக்கூடிய பகுதிகள் எனக் கண்டறியப்பட்ட பகுதிகளில் பேரிடரை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.  28 புயல் பாது காப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாது காப்பு மையங்கள், 191 தற்காலிக தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை செய்வதற்கு அவசரகால முன்னறி விப்பான் கருவிகள் தயார் நிலையில் உள்ளன என்றுதெரிவித்தார்.