சென்னை, மார்ச் 15 அகில இந்திய ஒப்பன் ஸ்னூக்கர் போட்டி சென்னை அண்ணாநகர் டவர் கிளப் வளாகத்தில் மார்ச் 18ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது. இப்போட்டியை தமிழ் நாடு பில்லியர்ட்ஸ் மற்றம் ஸ்னூக்கர் சங்கம் அண்ணாநகர் டவர் கிளப் ஆதரவுடன் நடத்துகிறது. துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கலந்து கொண்டு தமிழ்நாடு அளவிலான போட்டிகளை துவங்கி வைத்தார். இந்த போட்டி மார்ச் 15தொடங்கி 17ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது. இதில் 12 அணிகள் கலந்து கொள் கின்றன. அகில இந்திய ஒப்பன் ஸ்னூக்கர் போட்டியில் அர்ஜுனா விருது பெற்ற வீரர் சவுரவ் கோத்தாரி, ஆதித்ய மேத்தா, வருண் குமார், திலிப்குமார் உள்ளிட்ட அகில இந்தியா அளவில் முன்னணி வீரர்கள் பங்குகொள்கின்றனர். போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். மற்றும் கேடயங்கள் வழங் கப்படவுள்ளன துவக்க விழாவில் போட் டியின் இயக்குநர் கிஷோர் குமார், சர்வதேச நடுவர் வாசிம் அகமது,ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் ராஜாராமன், மனோஜ் தசர தன், சஞ்ஜிவ் மேத்யு உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
இளைஞர்களை ஆரோக்கிய பாதைக்கு திருப்ப விளையாட்டு பயன்படும்
இளைஞர்களை ஆரோக்கிய பாதைக்கு திருப்ப விளையாட்டு பயன்படும் நாட்டில் தற்போது போதை பழக்கம் அதிகரித்துள்ள நிலையில் இளைஞர்களை அந்த பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்கவும் ஆரோக்கியமான பக்கத்திற்கு திருப்பவும் விளையாட்டு பயன்படும் என்று மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி கூறினார். மிகவும் அறியப்படாத ஸ்னூக்கர் விளையாட்டு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இது போன்ற போட்டிகள் பயன்படும் என்றும் அவர் தெரிவித் தார். பொதுவாக விளையாட்டுபோட்டிகளை ஊக்கு விக்கும் செயல் எப்போதும் வரவேற்கத்தக்கது என்றும் ஸ்னூக்கர் விளையாட்டு சங்கம் மற்றும் அண்ணாநகர் டவர் கிளப் முன்முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றும் கலாநிதி வீராசாமி கூறினார்.