கள்ளக்குறிச்சி. மார்ச் 19- 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அஞ்சல் வழியாக வாக்களிக்க ஏதுவாக படிவம் 12 டி நிரப்பி அனுப்பவேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஷ்ரவன்குமார் தெரி வித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது, மூத்த மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இல்லத்திற்கே சென்று 12 டி படிவத்தினை வழங்கி அதனை பூர்த்தி செய்து மார்ச்.25க்குள் மாவட்ட நிர்வாகத்தி டம் வழங்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் நேரடியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்கலாம். வாக்களிக்க போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படிவம் 12 டி வழங்கி விட்டால் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட 7,334 வாக்காளர்களும். 11,550 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மேலும் தேர்தல் தொடர்பாக பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு. தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சி விஜில் என்ற மொபைல் செயலியில் உரிய ஆவணங்களுடன் புகார் தெரி வித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மார்ச்.20 முதல் 27 வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து 6 நாட்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது.இதற்கான படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வரு கிறது. மேலும் தேர்தல் ஆணைய இணையதளத்திலும் இப்படிவங்கள் கிடைக்கின்றன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.