மாமல்லபுரத்தில் ஒலி ஒளி காட்சி
செங்கல்பட்டு, டிச.9 - மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பாதுகாக்கும் வகையில் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள 75 புராதன சின்னங்களில் டிஜிட்டல் முறையில் ஒளி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மாமல்லபுரத்தில் வெள்ளியன்று இரவு வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, கடற்கரை கோவில் பகுதியில் பகுதியில் இரவு 9 மணி வரை, ஒளி அலங்காரத்துடன் டிஜிட்டல் லோகோ ஒளி அமைக்கப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், வரும் நாட்களில் கடற்கரை கோவில், ஐந்துரதம் மற்றும் அர்ஜூனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் பகுதியில் ஒளி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
புதுப்பெண் மின்சாரம் தாக்கி பலி
திருவள்ளூர், டிச.9 - திருவள்ளூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (22). இவர் அப்பகுதி யில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். ரஞ்சித்குமார் அதே பகுதியை சேர்ந்த பிரிய தர்ஷினியை (18) 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று பிரியதர்ஷினி குளிப்பதற்காக குளியல் அறையில் ஹீட்டரை போட முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தார். இதை கண்ட வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கடம்பத்தூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறு குறு நிறுவனங்களுக்கு நிவாரணம் அளித்திடுக தொழில் முனைவோர் சங்கம் கோரிக்கை
சென்னை, டிச. 9- தமிழ்நாடு அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு நிறுவனங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் கே.இ.ரகுநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் நிவாரண அறிவிப்பில், சிறு, குறு நிறுவனங்கள், தெரு வியாபாரிகள், ஜிஐஜி வேலை வாய்ப்பு இழந்தவர்கள், வாகனம் இழந்து அதனால் வருமானம் இழந்தவர்களுக்கு எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஏறக்குறைய ரூ.11,000 கோடி அளவிலான வணிகம் இழந்தவர்களுக்கு அரசு கட்டாயம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மின் கட்டணம் செலுத்த இவர்க ளுக்கும் 18ஆம் தேதி வரைதான் கால அவகாசம் தரப்படும் என மின் துறை அமைச்சர் அறிவித்திருப்பது மிகுந்த வருத்த மளிக்கிறது. எனவே கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். அதேபோல் நிலை கட்டணத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இல்லையென்றால் தொழில் நிறுவனங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.
இயற்கையின் எச்சரிக்கையை புறக்கணிக்கலாமா?
சென்னை, டிச.9 - மிக்ஜம் புயல், அதையொட்டிய தொடர் கனமழையின் கொடூரமான தாக்குதலிலிருந்து சென்னை இன்னும் மீளவில்லை. ஆண்டுதோறும் பெய்கின்ற குறைந்தபட்ச மழையில் கூட, சென்னை நகரின் ஒருபகுதி வெள்ளக்காடாக மாறிவிடுவதை சாதாரணமாக கடக்கிறோம். சாதாரண மீனவ கிராமமான சென்னை, கட்டுமானம் முதல் தொழில் நுட்பத் துறை வரை வளர்ந்து, உழைப்பாளி மக்கள் நிறைந்த நகரமாக மாறி உள்ளது. குடியிருப்புக் கட்டு மானத்திற்கு அரசுக் கட்டுப்பாடுகள் பல இருப்பினும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி கார்ப்பரேட் நிறுவனங் களின் பல கட்டிடங்களை கட்டுகின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் எச்சரித்தும் கூட, கட்டிடங்கள் பெருகி வருவதை அரசு தடுக்கவில்லை. இதனால், இனி வரும் காலங்களில் பாதிப்பு மேலும்மேலும் அதிகமாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முதல் தாம்பரம் வரை உள்ள ஏரிகளில் 90 விழுக்காடு ஏரிகள் ஆழப்படுத்தாம லும், குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படாமலும் உள்ளது. ஏரி களில் தொழிற்சாலைக் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது. பெரும் குடி யிருப்புகளின் கழிவு நீர் கலப்பதை யும், மாமிச கழிவுகள் கொட்டுவதும் தொடர்கிறது. ஏரிகளின் வரத்துக் கால்வாயும், வெளியேறும் கால்வாய் கள் தூர்க்கப்பட்டும்; சாக்கடைகளாக மாற்றப்பட்டும் உள்ளது. பெருவெள்ள பாதிப்பிற்கு இவைகளும் முக்கிய காரணங்களாக உள்ளன. உலக நிதி மூலதனத்தை வரவேற்று, எளிதாக தொழில் நடத்தும் உத்திகளுக்கு, அடிக்கடி ஏற்படும் பெருவெள்ளம், மேலே குறிப்பிட்ட அம்சங்களும், முரணாகவே அமையும். எனவே, தமிழ்நாடு அரசு சென்னை மற்றும் சுற்றிலும் உள்ள ஏரிகளை ஆழப் படுத்தி, குப்பைகள் கொட்டுவதை தடை செய்ய வேண்டும். இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சென்னையின் உபரி நீர், பக்கிங்காம் கால்வாய், முட்டுக்காடு ஆகிய இரு பகுதி வழியாக கடலில் கலக்கிறது. இந்த இரண்டு வழி தடத்திற்கு இடைப்பட்ட பகுதியில், கடலில் கலக்கும் நீர் வழி தடங்கள் அறியப்பட்டு பராமரிக்க வேண்டும். அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாழ்படுகிறது, மேலும் குப்பை கொட்டுவதால் தனது உறிஞ் சும் தன்மை இழந்தும் காட்சி அளிக்கிறது. உலகிலேயே இரண்டா வது சதுப்பு நிலமான ‘ராம்சார்’ பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முறை யாக பராமரித்து, பறவைகள் சரணால யம் அமைத்து பாதுகாக்க வேண்டும். சென்னை நகரின் கடலோரப் பகுதியை வணிக நோக்கத்திற்காக தனியார் வசம் மாற்றுவதை உடனடி யாக நிறுத்த வேண்டும், புவி வெப் பமயமாதல், பருவநிலை மாற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான பிரத்யேக குழுவின் பரிந்துரைகளை அமல்படுத் திட வேண்டும். சென்னை பகுதியில் எஞ்சிய விளை நிலங்களை, கட்டிட மனையாக மாற்றப்படாமல் பொது நலன் கருதி அரசு பாதுகாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எஸ்.மோகன், செயலாளர் ஆர்.சீனிவா சன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளனர்.
பிரசவித்த பெண் பலி: உறவினர்கள் போராட்டம்
கடலூர்,டிச.9- கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மேல புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவ ரது மனைவி அனிதா வயது 27. சமையல் வேலை செய்து வரும் ராஜீவ் காந்திக்கு திரு மணமாகி 10ஆண்டுகளாகிறது. நான்கு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், இரண்டாவது பிரச வத்திற்கு அனிதா கடந்த 5 ஆம் தேதி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனிதாவிற்கு வெள்ளிக்கிழமை (டிச.8) சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர், அதிகமாக ரத்தப்போக்கு ஏற்படுவதால் சிதம்பரத்திலுள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிதம்பரம் செல்லும் வழியில் அனிதா உயிரிழந்தார். இந்நிலையில், அனிதாவின் உற வினர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
திருவண்ணாமலை ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
திருவண்ணாமலை,டிச.9- ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 2 அன்று காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஓய்வூதிய துறை இயக்குநர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, இம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், குடும்ப ஓய்வூ தியர்கள் தங்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் இதர பணப்பயன்கள். ஓய்வூதியத்திற்கான உத்தரவுகள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தால், இது குறித்து தங்களது கோரிக்கைகளை ஓய்வூதிய புத்தக எண், ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்தின் பெயர் மற்றும் ஓய்வு பெற்ற நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு இரட்டைப் பிரதியில் மாவட்ட ஆட்சியருக்கு ஜனவரி 10 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அனைத்து மனுக்களும் உரிய அலுவலருக்கு அனுப்பி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
ஆயுள் தண்டனை கைதி சாவு
கடலூர், டிச.9- கடலூர் அருகே கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் ஆயிரத்துக்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிதம்பரம் அருகே மேட்டுக்குப்பம், மணலூர், லால் புரத்தை சேர்ந்த சோமு (49) என்பவர் 2013 ஆம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். அவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருந்துள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்த சோமுவை சிறை மருத்துவர் பரிந்துரையின் பேரில் நவம்பர் 23 அன்று கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (டிச.8) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் சிஎம்சி நிறுவனர் பிறந்த நாள் விழா
வேலூர், டிச.9- வேலூர் சிஎம்சி மருத்துவமனை நிறுவனர் ஐடா ஸ்கடரின் 153 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. பணியாளர்கள் சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், மாநகர தொழிற்சங்க கூட்டமைப்பு அமைப்பாளர் சி.ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு கலந்து கொண்டார். மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், மாவட்ட திமுக அவைத் தலைவர் முகமது சகி, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் டீக்காராமன், விசிக மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார், சிஎம்சி மருத்துவமனை தொழிலாளர் சங்க செயலாளர் ஜார்ஜ் சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.