வெள்ளி கிரகத்தில் ஆய்வு செய்யும் சுக்ரயான் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு
இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
சென்னை, ஜூன் 9- வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் சுக்ரயான் திட்டம் குறித்து விரைவில் அறி விக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சோம் நாத் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளியில் வல்லரசு நாடு களுக்கு இணையாக பல்வேறு சாதனை களை படைத்து வருகிறது. கடந்த ஆண்டு சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்திற்கு அருகே சுமார் 600 கி.மீ. தொலைவில் நிலவின் தடம் பதித்தது. சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் திட்டமிட்டப்படி அனைத்து பணிகளையும் மேற்கொண்டது. நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் ஆய்வு செய்த ரோவர், அதில் நீர் மூலக்கூறுகள், இரும்பு, கந்தகம், சிங்க் உள்ளிட்ட பல தனிமங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டது. ஏற்கெனவே செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் இஸ்ரோ, ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்பி சூரியனின் மேற்பரப்பையும் ஆய்வு செய்து வருகிறது. மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இதற்காக விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ள 6 வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த 6 வீரர்களையும் கடந்த சில மாதங் களுக்கு முன்பு பிரதமர் மோடி அறிமுகப் படுத்தி வைத்தார். இதற்கான அடுத்தக்கட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் இஸ்ரோ, தற்போது வெள்ளி கிரகத்தையும் ஆய்வு செய்ய உள்ளது. இதற்கான சுக்ரயான் திட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என இஸ்ரே தலைவர் சோம்நாத் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய இஸ்ரோ தலை வர் சோம்நாத், சுக்ரயான் திட்டத்தை விரை வில் செயல்படுத்துவதற்கான யோசனை மற்றும் தொழில்நுட்ப வசதிகள் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். இஸ்ரோ வின் 2024ஆம் ஆண்டின் திட்டப்பணியில் சூரியனிலிருந்து 2ஆவது கிரகமான வெள்ளிக் கோளை ஆய்வு செய்யும் இடம் பெற்றுள்ளது. இந்த பணி இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெள்ளி கிரகத்தை இஸ்ரோ விண்கலத்தை அனுப்பும் பட்சத்தில் அது இந்தியாவின் முதல் பயணமாக இருக்கும் என்பது குறிப் பிடத்தக்கது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் திட்டம்
ராணிப்பேட்டை, ஜூன் 9 - தமிழ்நாடு சிறுபான்மையினர் பொரு ளாதார மேம்பாட்டு கழகத்தில் கடன் பெற விரும்பும் சிறுபான்மையினர் விண்ணப்பிக்க லாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடன் திட்டத்தின் கீழ் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1லட்சத்து 20ஆயிரத்திற்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6விழுக்காடு வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20லட்சமும் திட்டம் 2 ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1லட்சம் ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படு கிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10% பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1லட்சத்து 50ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. சிறுபான்மை மாணவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை,முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20லட்சம் வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்க ளுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படு கிறது. மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் சமணர்கள் ஆகியோர் கடன் விண்ணப்பங் களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறு மாறு மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தெரிவித்துள்ளார்.
சென்னை - ஜெய்பூர், திருநெல்வேலி - பிலாஸ்பூர் ரயில் உட்பட 36 ரயில்கள் ரத்து
சென்னை,ஜூன் 9- செகந்திராபாத் ரயில்வே கோட்டத்துக் குட்பட்ட பகுதியில் 3-வது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக அந்த வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வேக்குட்பட்ட தமிழ்நாடு, கேரளம் மற்றும் கா்நாடக மாநிலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்களின் சேவை முற்றி லும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப் பட்ட ரயில்கள் விவரம்:- சென்னை சென்ட்ரல்-ஜெய்ப்பூா் இடையே வாரம் இரு முறை இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 12697/12698) ஜூன் 21 முதல் ஜூலை 7 வரை முற்றிலும் ரத்து செய்யப்படும். மைசூரில் இருந்து தா்பங்கா வுக்கு ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக செல்லும் பாக்மதி விரைவு ரயில் ஜூன் 25, ஜூலை 2 தேதிகளி லும், மறுமாா்க்கமாக ஜூன் 28, ஜூலை 5-ந்தேதிகளிலும் ரத்து செய்யப்படும். திருநெல்வேலி - பிலாஸ்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 23, 30 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 25, ஜூலை 2 தேதிகளிலும் ரத்து செய்யப்படும். மன்னாா்குடியில் இருந்து பகத் கி கோதி செல்லும் விரைவு ரயில் ஜூன் 24, ஜூலை 1-ந் தேதிகளிலும், மறு மார்க்கமாக ஜூன் 27, ஜூலை 4-ந்தேதிகளி லும் ரத்து செய்யப்படும். மதுரை-பிகானோ் (ராஜஸ்தான்) இடையே இயக்கப்படும் அனுவ்ரத் விரைவு ரயில் ஜூன் 20, 27, ஜூலை 4-ந்தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 23, 30, ஜூலை 7-ந்தேதிகளிலும் ரத்து செய்யப்படும். ஜபல்பூா்-மதுரை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 20, 27, ஜூலை 4 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக ஜூன் 22, 29, ஜூலை 6 தேதிகளிலும் ரத்து செய்யப் படும். அதேபோல், கேரளத்தின் கொச்சுவேலி, எா்ணாகுளம் மற்றும் கா்நாடகத்தின் பெங்களூா், யஷ்வந்த்பூரில் இருந்து பாட்னா, பாடலிபுத்திரம், பிலாஸ்பூா், இந்தூா், தானாப்பூா், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாராந்திர விரைவு ரயில்கள் ஜூன் 20 முதல் ஜூலை 8 வரை ரத்து செய்யப்படும். புதுடெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ராஜ்தானி அதிவிரைவு ரயில் ஜூலை 3, 5 தேதிகளில் பாலா்ஷா வழியாக வருவதற்கு பதிலாக வாராங்கல், நிஜாமாபாத், பிம்பல், மஜ்ரி வழியாக இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில் ஜூலை 2, 3, 4-ந்தேதிகளில் பாலா்ஷா வழியாக செல்வதற்கு பதிலாக வாராங்கல், பேடப்பள்ளி, நிஜாமாபாத், பிம்பல், மஜ்ரி வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு
சென்னை, ஜூன் 9 - பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக பள்ளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. திருத் தங்கள் இருந்தால், தலைமை ஆசிரியர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் நகலில் உரிய திருத்தங்களை மேற் கொண்டு, அதை வருகிற 12-ந்தேதிக்குள் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். வாய்ப்பை பயன்படுத்தாமல் மதிப் பெண் சான்றிதழ் அச்சிட்ட பிறகு, திருத்தம் செய்ய கோரிக்கை மனுக்கள் அனுப்பக்கூடாது என்று அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.
ஆயுள் தண்டனை கைதி சாவு
கடலூர்,ஜூன் 9 - திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் அரச மரத்து தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48). கொலை வழக்கில் கைதான முத்துசாமிக்கு, திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்த முத்துசாமி, கடந்த 8.10.2013 முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சனிக்கிழமையன்று திடீரென வாந்தி எடுத்த அவர் மயங்கி விழுந்தார். கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட முத்துசாமி உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் இன்று மின்தடை
புதுச்சேரி,ஜூன் 9- புதுச்சேரி தொண்ட மானத்தும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் திங்களன்று (ஜூன் 10) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி புதுச்சேரி தொண்ட மானத்தும் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 22 கி.வோ பிள்ளை யார்குப்பம் மின்பாதையில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மின்தடை இதன் காரணமாக காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை திருபுவனை தொகுதிக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சோரப்பட்டு, வம்புபட்டு, செல்லிப்பட்டு, விநாய கம்பட்டு, தொண்டமானதும் (ஒரு பகுதி) பிள்ளையார் ்குப்பம் (ஒரு பகுதி) மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்துறை அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9736 பேர் தேர்வு எழுத முடியவில்லை
கிருஷ்ணகிரி,ஜூன் 9- தமிழ்நாடு அரசு ஆட்சிப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் அரசுப்பணிகளுக்கான தேர்வில் 8 வட்டங்களில்,131 மையங்களில்,41,219 பேர் விண்ணப் பித்திருந்த நிலையில் 31,483 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,736 பேர் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில் ஓசூர் அதியமான் கல்லூரியில் தேர்வு எழுத வந்தவர்களுக்கு தங்களுக்கான இடத்தை கண்டுபிடிக்க சரியான வழிமுறைகளை அரசு அதிகாரிகள் செய்யாத காரணத்தினால் குறிப்பாக பெண்கள் காலை 8.30 மணி முதலே தங்கள் தேர்வு எண்ணுக்கான இடத்தை கண்டுபிடிப்பதில் திக்குமுக்காடினர். 100 க்கும் மேற்பட்ட பெண்கள் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் 15 கிலோ மீட்டர் தூரத்தில் மலைகள் காடுகள் நிறைந்த பகுதிக்குள் உள்ள அத்திமுகம் அதியமான் வேளாண் கலை கல்லூரிக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் திண்டாடினர். அத்திமுகம் கல்லூரிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்ற நிலையில் 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வு எழுத அனுமதிக்காததால் பல பெண்கள் கண்ணீர் விட்டு அழுதபடி வீடு திரும்பினர். இதுபோல் மாவட்டம் முழுவதும் ஒரு சில நிமிட தாமதத்தால் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அழுதபடி வீடு திரும்பியதாக கூறப்படு கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க முகாம்
கள்ளக்குறிச்சி, ஜூன் 9- மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் சிறப்பு முகாம் ஜூன் 12 நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்து களில் கட்டணம் ஏதுமின்றி மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கான இலவச பேருந்து பயண அட்டை ஓராண்டுக்கு ஒரு முறை புதுப்பித்து வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை சிறப்பு முகாம் எதிர்வரும் ஜுன்12 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.எனவே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் வழங்கி வரும் 31.3.2025க்குள் பேருந்து பயண அட்டை புதுப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கை மற்றும் கால் பாதித்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல்.கல்வி பயில்வது, பணி செய்வது மற்றும் சுயதொழில் செய்வது தொடர்பான அசல் சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு 4புகைப்படங்களுடன் நேரில் வந்து பேருந்து பயண சலுகை அட்டையினை புதுப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்டத்தில் பார்வையற்ற 119 பேர் குரூப் 4 தேர்வு எழுதினர்
திருவண்ணாமலை, ஜூன். 9- திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத 73,224 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். அதில் 60 ஆயிரத்து 357 பேர் தேர்வு எழுதினர். 12,867 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வில் 119 பார்வையற்ற தேர்வர்கள் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையில் நகராட்சி பெண்கள் பள்ளி மற்றும் தியாகி அண்ணாமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.