5 வயது முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு அரை கட்டணம் பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்துதுறை உத்தரவு
சென்னை, மே 11- 5 வயதுக்குட்பட்ட குழந் தைகளுக்கு அரசு பேருந்து களில் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று 5 வயது முதல் 12 வயது வரை குழந்தை களுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும். நடத்துநர்களுக்கு சந்தேகம் பட்சத்தில் அடையாள அட்டையை காட்டி உறுதி செய்து கொள்ள வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவு அளித்துள்ளது. மாநகர அரசு போக்க வரத்து கழக பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் 5 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு கட்டண மில்லா பயணம் மேற் கொள்ள அனுமதிக்க வேண்டும். 5 வயதிற்கு மேற்பட்ட 12 வயது நிறை வடையாத குழந்தை களுக்கு அரைக் கட்டணம் வசூலிக்க வேண்டும். குழந் தைகளின் வயது குறித்த சந்தேகங்கள் ஏற்படின், தக்க பிறந்த நாள் சான்று அல்லது ஆதார் அடையாள அட்டை மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். உதா ரணமாக, 1.1.2020 அன்று பிறந்த குழந்தைக்கு 31.12.2024 அன்று வரை பயணக் கட்டணம் வசூ லிக்கத் தேவை இல்லை. இருந்தபோதிலும், நமது நடத்துனர்கள் மேற் படி அறிவிப்பை பொருட் படுத்தாமல், கட்டணம் வசூ லிப்பதாகவும், பயணிகளி டம் தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடுவதாக வும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது. எனவே, நடத்துனர்கள், மேற்படி அறிவிப்பை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்பட அறிவுறுத்தப்படு கிறது. மேலும், இதுகுறித்து புகார்கள் பெறப்பட்டால், சம்மந்தப்பட்ட நடத்துநர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள் ளப்படும் எனவும் எச்சரிக்கப் படுகிறது.
6000 எம்ஏஎச் பேட்டரியுடன் ஸ்மார்ட்போன்
சென்னை, மே 11- உயர்திறன்மிக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் ஐக்யூஓஓ நிறுவனம் தனது புதிய இசட்9எக்ஸ் ஸ்மார்ட்போனை இந்தியா வில் மே 16-ந்தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய இசட்9 எக்ஸ் அதன் பெரிய பேட்டரி, தனித்துவமான வடிவ மைப்பு மற்றும் சக்திவாய்ந்த செயல்திறன் ஆகிய வற்றுடன் தனித்து நிற்கிறது. இது ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன்1 மொபைல் இயங்குதளம் மூலம் இயக் கப்படுகிறது. மேலும் இது சமீபத்திய 4என்எம் செயல் முறை தொழில் நுட்பத்துடன் வலுவான செயல்திறன் மற்றும் மிகக்குறைந்த மின்நுகர்வு ஆகியவற்றை வழங்குகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள 6000 எம்ஏஎச் பேட்டரி 7.99மிமீ அல்ட்ரா மெலிதான வடி வமைப்பில் உள்ளது.