districts

img

கல்லூரி காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி கையெழுத்து இயக்கம்

கடலூர், ஜன.2- கல்லூரிகளில் பேராசிரியர் பணி யிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் கையெழுத்து இயக்கம்  நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி களில் நிரப்பப்படாமல் உள்ள 4000 க்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வலியுறுத்தி,  ஜனவரி 2 முதல் 5 ஆம் தேதி வரை இந்த இயக்கம் நடைபெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 20 புதிய அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளை தோற்றுவித்த அரசுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் நன்றி தெரிவித்துள்ளது. அதேசமயம் ஒரு கல்லூரியில் தேவை யான ஆசிரியர்கள் பணியாற்றும் போது தான் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும். எனவே பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி நடைபெறும் கையெழுத்திற்கு கடலூர் கிளைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ர.திலக்குமார் தலைமை தாங்கி னார். கடலூர் மண்டல பொருளாளர் ஜெ.சக்கரவர்த்தி  முன்னிலை வகித்தார். கையெழுத்து இயக்கத்தில், கடலூர் கிளைச் செயலாளர்  நா.சேதுராமன்,  இணைச்செயலாளர்  ராஜலட்சுமி, துணைத் தலைவர் ராஜ்குமார், பொருளாளர்  கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஹென்றி, வேணி மற்றும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக கடலூர் கிளை உறுப்பினர்கள் பங்கேற்ற னர்.