districts

img

ஷூ கம்பெனி தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்

ராணிப்பேட்டை, நவ. 24 -  ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், வாணியன்சத்திரம்-பூண்டி சாலையில் இயங்கி வரும் கால்ஷியம் ஷூ தயாரிப்பு தொழிற்சாலை அருகில் வெள்ளியன்று (நவ. 24) ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட டேனரி மற்றும் ஷீ தயாரிப்பு தொழிலாளர்கள் செங்கொடி சங்கம் சார்பில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பரசுராமன் தலைமையில் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பணி நீக்கம் செய்த தொழிலாளர்களுக்கு 12(3) ஒப்பந்தப்படி மீண்டும் பணி வழங்க வேண்டும். உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்காமல் வெளிமாநில தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து தொழிலாளர்கள் மத்தியில் மோதல் போக்கு உருவாக்குவதை நிர்வாகம் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “தொழிற்சாலை நிர்வாகம் தொழி லாளர்களுக்கு பணி வழங்க மறுத்தால் அனைத்து நிறுவனங்கள் முன்பும் தொடர் போராட்டம் நடைபெறும்” என்று சங்க பொதுச் செயலாளர் எம்.பி. ராமச்சந்திரன், ராணிப்பேட்டை சிஐடியு தலைவர் என். காசிநாதன், கே. குழந்தைவேலு ஆகியோர் எச்சரிக்கை விடுத்தனர்.