districts

img

பூந்தமல்லி நகராட்சி சாலையில் குளமாக மாறிய கழிவுநீர்..!

திருவள்ளூர், ஜன 18- திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட புறவழிச்சாலை, சென்னீர் குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள சாலையில், கழிவுநீர் குளமாக தேங்கி நிற்கிறது. இங்குகடந்த 2-மாதங்களாக கழிவுநீர் தேங்குவதால்,  சுகா தாரச் சீர்கேடு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கின்றனர். கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் அவ்வழியை பயன் படுத்தும்  மாணவர்கள் மர்ம நோய்க்கு ஆளாகி ன்றனர். பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் கால்வாயில் விடுகின்றனர். மழைநீர் கால் ்வாய் முறையாக அமைக்கப்படாததால் சென்னீர்குப்பம், பொன்னியம்மன் நகர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கு கிறது. பேருந்துகள், ஆட்டோக்கள்,இரண்டு சக்கர வாகனங்கள்  இந்த கழிவு நீரில்நீந்தி செல்கிறது.  கழிவு நீர் தேக்கத்தால்  கொசுக்கள் உரு வாகி மக்கள் பல்வேறு தொற்று நோய்க ளால் பாதிக்கப்பட்டு வருவதும், தொடர் கதையாக உள்ளது.இதை தடுக்க பாதாள சாக்கடை திட்டத்தை  முழுமையாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல அமைப்புகள் சார்பில்  போராட்டங்கள் நடைபெற்றன. இதன் பிறகு 2015-இல் அதிமுக ஆட்சியில் ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.ஆனால் இதுவரை பாதாள சாக்கடை  திட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூந்தமல்லி நகர செயலாளர் கி.பாரி கூறுகையில், பூந்தமல்லி நகராட்சி யில் பாதாள சாக்கடை திட்டம் அமலாக்க படும் என முன்னாள் முதல்வர் ஜெய லலிதா சட்டமன்றத்தில் ரூ.200 கோடி மதிப்பீ ட்டில் பணிகள் தொடங்கப்படும்என அறிவித்தார்கள்.இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப் ்படாததால் கழிவுநீர், மழைநீர் கால்வாயில் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. காட்டுப்பாக்கம், சென்னீர் குப்பம்,நசரேத்பேட்டை, வரதராஜாபுரம் ஆகிய ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைந்து ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.  பாதாள சாக்கடை திட்டம் அமலாகவில்லை எனில் மழைநீர் கால்வாய் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு நகராட்சி முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படும். கடந்த 10-ஆண்டு கால ஆட்சியில் அதிமுக அரசு மக்கள் நல திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. சென்னையை ஒட்டியுள்ள பகுதியில் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.  திமுக அரசும் பாதாள சாக்கடை திட்டத்தை அமல் படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். இதனை உடனடியாக நிறை வேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.