கடலூர்,மார்ச் 9- கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் தலைவர் உத்தமராஜ் தலைமையில் நடைபெற்றது. கடலூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி அருள்முருகன், மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் முதலாவது சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் இரண்டாவது சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரபாகர், முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி வேதி யப்பன், மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி சுதா ஆகியோர் முன்னிலை வகித்த னர். இதையடுத்து மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்கு கள் மற்றும் குடும்ப நல வழக்கு கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. இதில் முதன்மை மாவட்ட உரி மையியல் நீதிமன்ற நீதிபதி பத்மாவதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-I வனஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்- III ரகோத்தமன், மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் தலைவர் பால கிருஷ்ணன், செயலாளர் சுரேஷ்குமார், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வனராசு, செய லாளர் சிவசிதம்பரம் மற்றும் வழக்கறிஞர்கள், காவல்நிலைய அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் மாவட்ட தாலுகா நீதிமன்றங்க ளான சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி மற்றும் காட்டு மன்னார்கோயில் நீதிமன்றங்களி லும் வெள்ளியன்று அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னி லையில் தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதி மன்றத்தில் சுமார் 3,097 வழக்கு கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 1,462 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.24 கோடியே 25 லட்சத்து 61 ஆயிரத்து 707 தீர்வு தொகை வழங்க உத்தர விடப்பட்டது.