districts

img

பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்ஊழியர்கள் கருத்தரங்கம்

திருவள்ளூர், மார்ச் 11- பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணி யாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கருத்தரங்கில் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாகம் தொடர்ந்து தொழிலாளர்களை, பொறி யாளர்கள் மற்றும் அலுவலர்களை வஞ்சிக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்றது. ஒன்றிய பாஜக  அரசின் நாசகார கொள்கைக்கு எதிராக தமிழக அரசு செயல்படவேண்டும் என  சிஐடியு வலி யுறுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதி அளித்ததுபோல் 10 ஆண்டுகள் பணிமுடித்த ஒப்பந்த தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,ஓய்வூதியர்கள் மற்றும் தொழி லாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத  முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை கருத்தரங்கில் வலியுறுத்தினர். வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் திங்களன்று (மார்ச் 11), சிஐடியு நிர்வாகி பாண்டியன் தலைமையில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் ஆர்.ரவிக்குமார் சிறப்புரையாற்றினார்.