districts

img

கடலோர காவல்படை கப்பல்களுக்கு பள்ளி மாணவர்கள் வருகை

சென்னை,ஜன.20- இந்திய கடலோரக் காவல்படையும் கடல்சார் ஆயுதப்படையும்  பிப். 1 அன்று   48வது எழுச்சி நாளைக் கொண்டாடுகிறது. இந்திய கடலோர காவற்படை  1997 ஆம்  ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி கடலோர  காவல்படை சட்டம், 1978 மூலம் நிறுவப் பட்டது. கடலோர காவல்படையினர் தேசத்திற்கு  47 ஆண்டுகளாக ஆற்றிவரும்  சிறந்த சேவை பொதுமக்களுக்கு விளக்க ப்படுகிறது. எழுச்சி தினத்தை நினைவுகூரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடலோர  காவல்படையின் கிழக்கு  மண்டலம்  சார்பில்  ஜன. 20, 24 ஆகிய தேதிகளில் சென்னை யில் உள்ள கடலோர காவல்படை கப்ப ல்களுக்கு பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இளம் மாணவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை நாட்டின் பாதுகாப்பிற்கு ஆற்றிவரும்  பங்களிப்பை விளக்கவும் ஆயுதப்படையில் மாணவர்களை  சேர ஊக்குவிப்பதும் இந்த பயணத்தின் நோக்கம் என்று கடலோர காவற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.  சென்னையில் உள்ள 13 அரசுப் பள்ளிகள் மற்றும் 2 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 60 ஆசிரியர்களுடன் மொத்தம் 1,782 மாணவர்கள் கடலோர காவல்படை கப்பல்களான ஷௌர்யா மற்றும் சுஜய்க்கு வருகை தந்தனர். மாணவர்களை அதிகார்கள் அழைத்துச் சென்று கப்பலின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விளக்கினர். வலிமைமிக்க வெள்ளைக் கப்பல்களைப் பார்வையிட்டு அவற்றின் திறன்களைப் பற்றி அறிந்து கொள்வதில் மாணவர்கள் ஆர்வமாக இருந்தனர்.