districts

img

காந்தி பிறந்தநாளில் அகிம்சை வழியில் சாம்சங் தொழிலாளர்கள் உண்ணாநிலை

காஞ்சிபுரம், அக். 2- தொடர்ந்து 24 வது நாளாக கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி பிறந்தநாளில் அகிம்சை வழி யில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடு பட்டனர். சாம்சங்தொழிலாளர்களின் உரிமைக் காக சிஐடியு சார்பில் தமிழகம்  முழுவதும்  மாபெரும் ஆதரவு மறியல் போராட்டம்  நடைபெற்றது. காஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1000 தொழிலாளர் கள் கலந்து கொண்ட நிலையில் காவல்துறை யினர் தேடித்தேடி கைது செய்தனர். மேலும் இவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தின்  24 ஆம் நாளான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு போராட்ட பந்தலில் வைக்கப் பட்டிருந்த காந்தியடிகள் படத்திற்கு சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், மாநில செயலாளர் இ.முத்துக்குமார் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். பின்னர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,ஷ  காஞ்சிபுரத்தில் காவல்துறை சட்ட விரோதமாக நடந்து கொள்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த நிலை நீடித்தால் தொழிலாளர்கள் மத்தியில் அமைதி சீர்குலையும்.  தொழிலாளர்களை மிரட்டும் வகையில் வழக்கு பதிவு செய்திருப் பதை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம். வருங்காலத்தில் இதே நிலை நீடித்தால் இடதுசாரி கட்சிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த முடிவெடுத் துள்ளனர் மற்ற அரசியல் கட்சிகளையும் நாங்கள் சந்தித்து ஆதரவு கோர இருக்கி றோம் .  தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலை வராக இருந்த போது தொழிலாளர்களின் கோரிக்கைகளை அனைத்தையும் ஆதரித்தார்.  தான் ஆட்சிக்கு வந்தால்  அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றித் தருவேன் என்று உறுதி கூறினார். ஆனால்  ஆட்சிக்கு வந்தபின் எதையும் செய்ய வில்லை. சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதர வாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழி லாளர்கள் ஆலைகளின்  நுழைவாயிலில் கூட்டங்கள் நடத்துவது, உணவு புறக் கணிப்பு போராட்டம் நடத்துவது என  திட்டமிட்டுள்ளனர். சாம்சங் தொழிலாளர் களுக்கு  நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சனையில் அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.