விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமானடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அந்த ஊராட்சியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பஞ்சாயத்து பகுதியில் பணி செய்ய வேறு இடம் இல்லையோ என்னமோ தெரியவில்லை. அதனால், ஜானகிபுரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். தொடர் மழையின் காரணமாக பல்வேறு நீர்வரத்து வாய்க்கால்கள் அடைபட்டு வெள்ள நீர் அடிக்கடி ஊருக்குள்ளும் வயலுக்குள்ளும் புகுந்து விடுவதால், அதனையும் 100 வேலை பணியாளர்களை கொண்டு தூர்வார சம்மந்தப்பட்ட துறையை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.