பர்கூர் வட்டம், ஜிகினி கொள்ளையை சேர்ந்த கண்ணம்மாளின் கூரை வீடு செப்.18 அன்று தீப்பிடித்து எறிந்து முற்றிலும் சேதமடைந்தது. தகவல் அறிந்த சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன் பாதிக்கப்பட்ட கண்ணம்மாவை சந்தித்து ஆறுதல் கூறி சொந்த நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் வழங்கினார். முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று வீடு கட்ட உதவிகள் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.