districts

சென்னை முக்கிய செய்திகள்

மாநகராட்சி உயர்த்தி அறிவித்துள்ள  தொழில்வரி உயர்வை திரும்பெறுக

 தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு கோரிக்கை

சென்னை, ஜூலை 31- மாநகராட்சி தற்போது உயர்த்தி அறிவித்துள்ள தொழில்வரி உயர்வை திரும்பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தொழில் வரியை அதிகபட்சமாக 3 மடங்கு உயர்த்தி செலுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு வகையான தொழில் உரிமங்களாலும், ஜி.எஸ்.டி வரி சட்டங்களாலும், உணவுப் பாது காப்புத்துறை கெடுபிடிகளாலும், வணிகம் பல வகையிலும் பாதிக்கப்பட்டு, வணி கர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், உரிமங்கள் பெருவதிலும், புதுப்பித்தலிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இந்தச் சூழலில் வணிக உரிமம் பெரு வதற்காக உரிமத்தொகை செலுத்தப்பட்ட பின்னரும், தொழில் வரி என்ற ஒரு சுமையை ஏற்கனவே சுமந்து வந்தாலும், உரிமத்தொகைக்கும் அதிகப்படி யாக தொழில்வரி வசூலிப்பது என்பது ஏற்புடையது அல்ல. சட்ட விதிக ளுக்கு உட்பட்டு செய்யும் வணிக தொழி லுக்கு பல்வேறு வகைகளில் வரி வசூ லிப்பது என்பது, சட்ட விதிகளுக்கு புறம்பானதாகும். வணிக வருமானத்திற்கேற்ப அரை யாண்டு தொழில்வரியாக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையது அல்ல. வருமான வரி செலுத்திய பின்னரும், வருமானத்திற்கேற்ற தொழில்வரி என்று விதித்திருப்பது, வணிகம் செய்வதற்கு வணிக உரிமக்கட்டணம் என்று வசூ லிப்பது, வணிக நிறுவனங்களிடம் குப்பை வரி என்று வசூலிப்பது போன்ற பல அடுக்கு வரிச்சுமையை, நாட்டின் பொரு ளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் வணிகர்களின் மீது சுமத்துதப்படுகிறது. வணிக அமைப்பின் நிர்வாகிகளை கலந்து பேசாமல் தொழில்வரியை உயர்த்தி அறி வித்திருப்பது வருத்தத்திற்குரியது. சிறு, குறு நடுத்தர வணிகர்களின், வாழ்வாதாரத்தை தக்கவைத்துக் கொள்ள வும், வணிகர்கள் வணிகத்தை விட்டு விலகிச் செல்லாமல் இருப்பதையும் உறுதி செய்யும் வகையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள அதிகபடியான தொழில்வரியை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு குழாயில் சேதம்: காவல் நிலையத்தில் புகார்

காஞ்சிபுரம், ஜூலை 31-  வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எல்பிஜி எரிவாயுக்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை  ஏஜி&பி பிரதம் நிறுவனம் குழாய் மூலம் இந்தியா முழுவதும் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வழங்கி வருகிறது. இந்நிலையில் பெரும்பாக்கம் ஜெயா நகரில் கடந்த 23-ந்தேதி கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிக்காக ஜேசிபி எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது அங்கு பதிக்கப்பட்டு இருந்த ஏஜி&பி பிரதம் நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரிவாயு குழாயில் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக எரிவாயு கசிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்து வந்த இந்நிறுவனத்தின் ஊழியர்கள் அதை உடனடியாக சரி செய்து அப்பகுதிக்கான எரிவாயு வினியோகத்தை சீர்செய்தனர். இந்த சம்பவம் குறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற பணிகளால் ஏற்படும் சேதங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

காலமானார்

சென்னை, ஜூலை 31 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தி.நகர் பகுதிக்குழு உறுப்பினரும்,  ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்க தென்சென்னை மாவட்டத் தலைவருமான ஜெ.முகம்மது அனிபாவின் மனைவி பாத்திமா பீவி செவ்வாயன்று (ஜூலை 30) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48. நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், தி.நகர் பகுதிச் செயலாளர் இ.மூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.குமார், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சரிடம்  மாணவர்கள் புகார்

சென்னை, ஜூலை 31- குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை   அமைச்சர் தாமோ அன்பரசன் புதனன்று தொடங்கி வைத்தார். பள்ளியில் 55 மாணவர்களுக்கு விலை யில்லா மிதிவண்டி வழங்கபட்டது. விலையில்லா மிதி வண்டியை பெற சென்ற மாணவர்கள்  தங்களது பள்ளியில் முறையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி இல்லை என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். விழா முடிந்ததும் கழிப்பறையை ஆய்வு செய்த அமைச்சர் கழிப்பறையை சீரமைத்து  முறையாக பராமரிக்குமாறு பள்ளி  நிர்வாகத்திற்கு அறி வுறுத்தினார்.

ரவுடியை கொலை செய்த  5 பேருக்கு ஆயுள் 

விழுப்புரம்,ஜூலை 31- சாராயம் விற்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த முன்விரோதத்தில் ரவுடியை கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் நத்தமேடு கிராமத்தை சேர்ந்த ரவுடி மோகன் (35), அதே கிராமத்தில் முருகதாஸ் என்பவர் சாராயம் விற்பனை செய்து வந்தார். இதுபற்றி மோகன், அவரது தம்பி லட்சுமணனும் காவல்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். அதன்பேரில் முருகதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்விரோதம் காரணமாக 31.5.2015 பிடாகம் டாஸ்மாக் கடை அருகில் முருகதாஸ், அவரது தம்பிகள் சக்திவேல் (38), சங்கர் (39), ரகு (36), உறவினர்களான ஆறுமுகம் (39), முனுசாமி (45), முருகதாஸ் மனைவி ருக்மணி (38) ஆகிய 7 பேரும் சேர்ந்து மோகனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது குறித்த புகாரின்பேரில் முருகதாஸ் உள்ளிட்ட 7 பேர் மீதும் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜ சிம்மவர்மன், குற்றம் சாட்டப்பட்ட முருகதாஸ், அவரது தம்பிகள் சக்திவேல், சங்கர், ரகு, உறவினர் ஆறுமுகம் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், முனுசாமி, ருக்மணி ஆகிய இருவரையும் விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார்.