புதுச்சேரி, டிச.1- சிஐடியு புரட்சி கவிஞர் தமிழ் ஒளி ஆட்டோ சங்க கிளை திறப்பு விழா புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் எதிரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். சிஐடியு புதுச்சேரி மாநில ஆட்டோ சங்க தலைவர் மணவாளன் புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார். சங்கத்தின் கொடியை மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார் ஏற்றி வைத்தார். பொருளாளர்,துளசிங்கம், மாநில நிர்வாகிகள் பழனி பாலன்,மனோகர், செந்தில்குமார், ரவிக்குமார்,சங்கர், ராமு, உட்பட திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் விழாவில் பங்கேற்றனர்.