districts

சென்னை முக்கிய செய்திகள்

மாமல்லபுரத்திற்கு வருவாய்  அதிகரிப்பு

செங்கல்பட்டு,ஜன.5- மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை உள்ளிட்ட கலைச் சிற்பங்களை, தொல்லியல்துறை பாது காத்து பராமரித்து வரு கிறது.  இதை அருகில் சென்று தொட்டு பார்த்து ரசிப்பதற்கு வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600, இந்தி யருக்குரூ.40 கட்டணம் வசூ லிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் பள்ளிக்கு அரை யாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணி களின் வருகை அதி கரித்தது. இதில் கடந்த ஒரு வாரத்தில் சுற்றுலா பயணி களின் வருகையால் தொல்லி யல் துறைக்கு ரூ.8லட்சம் வரை வருவாய் கிடைத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசர சிகிச்சைக்கு  நிரந்தர ஆம்புலன்சு

வண்டலூர்,ஜன.5- சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் வசதிகள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் அவசர சிகிச்சைக்கு நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு பயணிகள்வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, புதிய பேருந்து நிலையத்தில் இலவச தனியார் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர் ஆலோசனை, மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், மற்ற அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே முற்றிலும் இலவசமாக மருத்துவ வசதியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். அல்லது, அரசு மருத்துவமனை ஒன்றை இங்கு அமைக்க வேண்டும்.இதேபோல் ஏழை, எளியோர் குறைந்த விலையில் உணவு சாப்பிடும் வகையில் அம்மா உணவகம் திறந்தால் வசதியாக இருக்கும் என்றனர்.

கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட பாலம்  அமைக்க வலியுறுத்தல்

பொன்னேரி,ஜன.5-  மீஞ்சூரை அடுத்த வெள்ளி வாயல் சாவடி பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கரைகளையொட்டி உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள், செங்கல் சூளை மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன.  வெள்ளிவாயல் வரை செல்வதற்கு பயன்படுத்தும் பாதை ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால் அவ்வழியே பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.வெள்ளிவாயல் சாவடி கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் போது எதிரே உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும் அருகில் உள்ள வெள்ளிவாயல், சுப்பாரெட்டிபாளையம், விச்சூர் உள்ளிட்ட கிராமமக்கள் 10 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று சுற்றி உள்ள 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு வேண்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல்

செங்கல்பட்டு, ஜன.5- செங்கல்பட்டு அடுத்த வேண்பாக்கத்தில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் ரூ 97 கோடியில் அமையவிருக்கும் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான கட்டுமானப்பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின்  காணொலி காட்சி வாயிலாக துவக்கிவைத்தார்.  காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, ஆகியோர் முன்னிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேற்றி பணியினை துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், சார் ஆட்சியர் நாராயண சர்மா, பயிற்சி ஆட்சியர் ஆனந்குமார் சிங், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ்,  செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், நகர் மன்ற துணைத் தலைவர் அன்புச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அலுவலக உதவியாளர் பணி தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு

சென்னை, ஜன. 5 - பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ‘யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி’ அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போட்டித் தேர்வுக்கான அட்டவணையையும் விரைவில் வெளியிட உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும் இணைந்து நடத்துகின்றன. இலவச பயிற்சி வகுப்பு ஜன.7 அன்று, அரண்மனைக்காரன் தெரு, எண்.7, கச்சாலீஸ்வரர் கோயில், பாரிமுனை, சென்னை-1 என்ற முகவரியில் தொடங்கும். வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு: 9444982364, 9444622968, 9444264640, 944928162

அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு  கல்விக் கட்டணம் குறைப்பு

சென்னை,ஜன.5- சென்னை அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு 15 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.  ஒவ்வொரு பிரிவிலும் 5 விழுக்காடு இடங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் ஒரு சில பிரிவுகளை தவிர அனைத்து வகைகளுக்கும் நிலையான கட்டணம் 7,500 அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் என்.ஆர்.ஐ.க்கள் கணினி அறிவியல் பொறியியல் (சி.எஸ்.இ.) தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் (இ.சி.இ.) உள்ளிட்ட 3 பாடப்பிரிவுகளில் மட்டுமே சேருகிறார்கள். அதனால் இந்த 3 பாடப் பிரிவுகளுக்கான கட்டணத்தை 7,500 அமெரிக்க டாலராகவும் இவை தவிர எந்திர பொறியியல், சிவில் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிற கிளைகளுக்கு கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் 3750 அமெரிக்க டாலராக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்கெனவே உள்ள கட்டணம் ரூ.6 லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது. வரும் கல்வி ஆண்டு முதல் ரூ.3 லட்சத்து 11 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. 50 விழுப்புரம் கட்டணத்தை குறைப்பு நடவடிக்கை அதிக மாணவர்கள் தேர்வு செய்யாத படிப்புகளை பிரபலப்படுத்த உதவும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறினார்.

பட்டாவை ரத்து செய்யக் கூடாது: ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

திருவண்ணாமலை,ஜன.5- ஆரணியில் உள்ள சங்க அலுவலகத்திற்கு, அரசு வழங்கிய பட்டாவை ரத்து செய்யக்கூடாது என்று சாராட்சியருக்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் செயல்பட்டு வரும் அலுவலக இடத்திற்கு முறையாக விண்ணப்பம் செய்து பட்டா பெறப்பட்டுள்ளது. ஆனால், ஆரணியில் உள்ள சில வழக்கறிஞர்கள் அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதை யடுத்து, ஆதாரங்களுடன் ஆரணி கோட்டாட்சியரை சந்தித்து ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் மனு அளித்த னர். இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் சி.சுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் ப.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செய லாளர் எஸ். பச்சையப்பன், மாவட்ட  துணைத் தலைவர் எல். திருவேங்கடம், ஆரணி வட்ட தலைவர் இரா.அமிர்தலிங்கம், வட்டச் செயலாளர் அ.விருஷப தாஸ், பொரு ளாளர் ஆ. சங்கர், வட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

1004 பயனாளிகளுக்கு பட்டா : வேளாண் அமைச்சர் வழங்கினார்

கடலூர்,ஜன.4- கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் வரு வாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற பட்டா வழங்கும் சிறப்பு முகாம் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் ஆகியோர் முன்னிலையில் 1004 பயனாளி களுக்கு ரூ.6,68,07,000  மதிப்பீட்டிலான இலவச வீட்டு மனை பட்டா, கணினி-பட்டாக்கான ஆணையை வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ராஜாராம், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ச.அதிய மான் கவியரசு, குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியர் சே.சுரேஷ்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் 10.20 லட்சம் வாக்காளர்கள்: பெண்களே அதிகம்!

புதுச்சேரி,ஜன.5- புதுவை அரசின் தேர்தல் துறை சார்பில் மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்தது. புதிய வாக்காளர்கள் சேர்த்தல், திருத்தல் பணிகள் நடந்தது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.  பெறப்படும் விண்ணப்பங்கள் பரி சீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் புதுவை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- இந்திய தேர்தல் ஆணைய அறி வுறுத்தலின்படி புதுவை மாநில வாக்காளர் திருத்த பணி கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை நடந்தது. புதுவை மாநிலத்தில் தற்போது 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர்.  புதுவை பிராந்தியத்தில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 28 ஆண், 4 லட்சத்து 15 ஆயிரத்து 183 பெண், 3ம் பாலினத்தினர் 124 என மொத்தம் 7 லட்சத்து 84 ஆயிரத்து 335 வாக்காளர்கள் உள்ளனர். காரைக்காலில் 76 ஆயிரத்து 932 ஆண், 89 ஆயிரத்து 258 பெண், 3ம் பாலினத்தினர் 24 என மொத்தம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 214 வாக்காளர்கள் உள்ளனர். மாஹே பிராந்தியத்தில் 14 ஆயிரத்து 357 ஆண், 16 ஆயிரத்து 653 பெண் என மொத்தம் 31 ஆயிரத்து 10 வாக்காளர்களும், ஏனாம் பிராந்தியத்தில் 19 ஆயிரத்து 12 ஆண், 20 ஆயிரத்து 343 பெண் என 39 ஆயிரத்து 355 வாக்காளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக புதுவை மாநிலத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 329 ஆண், 5 லட்சத்து 41 ஆயிரத்து 437 பெண், 3ம் பாலினத்தினர் 148 என ஒட்டுமொத்தமாக 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தற்போது புதிதாக 36,044 பேர் சேர்க்கப்பட்டனர். 22,309 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 18 முதல் 19 வயது நிரம்பிய வாக்காளர்கள் 26 ஆயிரத்து 959 பேர் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெளியிடப்படும். பொதுமக்கள் பொது விடுமுறை தவிர 7 நாட்கள் இந்த பட்டியலை பார்வையிடலாம். முதல் முறை வாக்காளர்களுக்கும், குடி பெயர்ந்த திருத்தங்களுக்கு விண்ணப்பித்த வாக்காளர்களுக்கும் அவர்களின் முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் வாக்காளர் அட்டைகள் அனுப்பி வைக்கப்படும். வாக்காளர்கள் அதில் திருத்தங்கள் செய்ய நேரடியாகவும், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.