தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சென்னை மண்டலம் சார்பில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 3 மாவட்டங்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.45 ஆயிரம் தேர்தல் நிதி வழங்க சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பெற்றுக் கொண்டார். இதில் பொதுச்செயலாளர் கே.வீரராகவன், தலைவர் டி.குருசாமி, பொருளாளர் ஆதிமூலம், நிர்வாகிகள் முத்துக்குமார், பி.முருகேசன், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன், ஆர்.வேல்முருகன், மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.