districts

img

மின்கம்பி இணைப்புகளை புதைவட கேபிளாக மாற்றிடுக

சென்னை, பிப். 16- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு முதல் பகுதியின் பகுதிசபை கூட்டம் உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. திருவீதியம்மன் நகர், பெருமாள் கோயில் தெரு, ஆதிதிரா விடர் காலனி, நியூ காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். தற்போது மின் இணைப்புகளுக்கான வயர்கள் மேல்நிலை கம்பிகளாக உள்ளன. அவற்றை புதைவட கேபிள் மூலம் அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர் காலனியில்  வசிக்கும் மக்களுக்கு உடனடியாக புதிய மின் இணைப்பு  வழங்க வேண்டும். திருவீதியம்மன் 5ஆவது தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும். அரசு நிலங்களில்  குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.  உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு மெட்ரோ உதவி பொறியாளர் மதன்ராஜ், உதவி பொறியாளர் அன்னலட்சுமி, மின்துறை அலுவலர் நாகராஜ்,  வருவாய்த்துறை அலுவலர் ராஜீ, தீயணைப்புத் துறை அலுவலர் ஜெயராமன் ஆகியோர் பதில் அளித்தனர். இறுதியாக மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன்  தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றி மண்டலக்குழு விற்கு அனுப்பி வைத்தார். இதில் கிராம நிர்வாகிகள் அழகிரி, பிரபு, கிரிஜா நகர் தலைவர் சுப்பிரமணியன் நேதாஜி  நகர் தலைவர் சடகோபன், சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் பகுதிக்குழு உறுப்பினர் வெங்கடையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.