districts

img

கோமாரி நோயால் கால்நடைகள் பலி: நிவாரணம் வழங்க கோரிக்கை

கோமாரி நோயால் கால்நடைகள் பலி: நிவாரணம் வழங்க கோரிக்கை கடலூர்,டிச.23- கடலூர் மாவட்டம் முழுவதும் கோமாரி நோயால் ஆயிரக்கணக்கான மாடுகள் பலியாகி வருகிறது. நோய்க்கான தடுப்பு மருந்தை உடனடியாக வழங்க வேண்டும், உயிரிழந்த மாடுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி ரூ.50 ஆயிரம், கன்றுக்குட்டிக்கு ரூ.15 ஆயிரம் ஆடுகளுக்கு ரூ.7,000 ரூபாயும் நிவாரணம் வழங்க வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் கால்நடை மருத்துவமனை மீண்டும் அதே இடத்தில் இயக்க வேண்டும், கால்நடை தீவனங்களை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் புதுப்பாளையம் கால்நடை மருத்துவமனை முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர அமைப்பாளர் எம்.பழனி தலைமை தாங்கினார்.