districts

img

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுஇடத்தில் நிறுவ கோரிக்கை

திருவள்ளூர், ஜன.4- வீடுகள் மற்றும் தொழிற்சாலை களிலிருந்து வாகனங்கள் மூலம் கொண்டு  வரும் கழிவு நீரை சுத்தி கரிக்கும் நிலையத்தை அமைக்க ஒரு பொதுவான இடத்தை தேர்வு செய்ய,  பொன்னேரி கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு வலி யுறுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. பெரும்பாலான வீடு களில் கழிப்பறையை தான் பயன்படுத்து கின்றனர்.

மேலும் கும்மிடிப் பூண்டி சிப்காட், பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற் சாலைகளில்    வெளியேற்றப்படும் கழிவு நீரை  தனியார் வாகனங்கள் மூலம் கொண்டு சென்று அகற்றி வருகின்றனர். இதற்காக வாக னங்களை வைத்துள்ள தொழி லாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கழிவு நீரை வாகனங்களில்  கொண்டு சென்று சிலர் ஏரிகளில் அல்லது காலியாக உள்ள இடங்களில் கொட்டுவதால் சுற்றுப்புற சூழலும்,  நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து  வருவாய்த்துறையினர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்கிறது. இப்பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு காணும் வகையில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து கழிவு களை அகற்றும் பணியை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம்  பலமுறை வலி யுறுத்தி வருகின்றனர். கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைத்து தருவதாக கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் ஏற்கெனவே வாக்குறுதி அளித்து 4ஆண்டுகளாக செயல் படுத்தாமல் உள்ளது.வெட்ட வெளி யில் கழிவு நீரை விடுவதால் சுற்றுப்புற சூழல் மாசு அடைந்து வரு கிறது. அதிகாரிகளை கேட்டால், திரு மழிசையில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவு நீரை கொண்டு செல்ல வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படு கிறது. கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து திருமழிசை செல்ல வேண்டும் என்றால் வாகனம் ஒன்றுக்கு டீசல், சுங்க கட்டணம், ஓட்டுநர், கிளினிர் கூலி, வாகன பராமரிப்பு என 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரிக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். இது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். இப்போது வெறும் ரூ1500 வாடகை பெற்று கழிவு நீர் அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 வேலை நிறுத்தம்

இது குறித்து  சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், மாவட்ட துணை துணைச் செயலாளர் கே.அர்ஜுனன் தெரிவிக்கையில்,  பொன்னேரி கோட்டாட்சியர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு பொதுவான இடத்தை தேர்வு செய்து,  கழிவு நீரை சுத்திகரிக்கும் ஒரு நிலையத்தை அமைத்து தர வேண்டும். குடியிருப்புகளிலிருந்து கழிவு நீர் அதிகமாய் கொண்டு வரும் நிலையில் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வருவதன் மூலமாக மக்களை சுகாதார கேடுகளில் இருந்து மீட்க முடியும் என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து தர வேண்டும். கடந்த 10 நாட்களாக தங்கள் கோரிக்கை களை வலியுறுத்தி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு  வரு வதால் உடனடியாக கும்மிடிப் பூண்டியில் கழிவு நீரை கொட்டு வதற்கு மாற்று இடத்தை தற்காலிக மாக ஒதுக்க வேண்டும் என்றனர். இதில் கும்மிடிப்பூண்டி வட்டார கழிவு நீர் அகற்றும் வாகன உரி மையாளர்கள் நலச் சங்கத்தின் தலை வர் சி.ராமலிங்கம், செயலாளர் எஸ். கோபி, பொருளாளர் வி.நாகராஜ், ஆலோசகர் எம்.சம்பத், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ப.லோக நாதன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.