ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பாராஞ்சி பணவாட்டம் பாடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொளாபுரி தலைமையில் நடைபெற்றது. மலைவாழ் மக்களுக்கு எபிஎம் சர்ச் வாலிபர் சங்கம் கிளை சார்பில் 60 மலைவாழ் மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எபிஎம். சீனிவாசன், வாலிபர் சங்க நிர்வாகிகள் சிவராமகிருஷ்ணன், பிரசாந்த், அப்பு, தென்னரசு, கமலக்கண்ணன், தனுஷ், சூர்யா, மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.