சிதம்பரம், செப். 5- சிதம்பரம் ரயில் நிலையத்தில் செங்கோட்டை, கம்பன், அயோத்தி விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும், மயிலாடுதுறையில் இருந்து கோவைக்கு செல்லும் விரைவு ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலி யுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செப். 5 அன்று சிதம்பரத்தில் ரயில் மறியல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வரும் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறுவதாக இருந்த இந்தப் போராட்டத்திற்கு சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, வர்த்தக சங்கம், மத்திய தொழிற்சங்கம், உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த நிலையில், சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை உதவி ஆட்சியர் சுவேதாசுமன் தலைமையில் நடைபெற்றது. விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், டிஎஸ்பி ரூபன் குமார், ரயில்வே இருப்பு பாதை காவல் ஆய்வாளர் அருண்குமார், சிபிஎம் நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், ஜெயசித்ரா, நகர்மன்றத் துணைத் தலைவர், முத்துக்குமரன், சிபிஐ வட்டச் செயலாளர் தமிழ் முன்னன்சாரி, பொதுநல அமைப்பினர், ரயில்வே துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், சிதம்பரம் ரயில் நிலை யத்தில் நின்று செல்லாத ரயில்கள் 30 நாட்களுக்குள் நிற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனசதாப்தி சிதம்பரம் வரைக்கும் நீடிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதை யடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.