districts

img

4வது வார்டு சாலைகளை முழுமையாக சீரமைப்பது எப்போது?

சென்னை, செப். 30- பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வெள்ளியன்று (செப்.27) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ஆர்.ஜெயராமன், “திரு வொற்றியூர் மண்டலம் 4வது வார்டில் 200க்கும் மேற்பட்ட தெருக்கள், சாலைகள் உள்ளன. அவற்றில் 112 சாலைகள், தெருக்கள், தார் மற்றும் பேவர்பிளாக் சாலைகளாக அமைக்க வார்டு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 42 சாலைகள், தெருக்கள், தார் மற்றும் பேவர் பிளாக் சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளது.  நடப்பாண்டில் 10 சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருவீதியம்மன் நகர் 5வது தெருவை செப்பனிட ஒப்பந்தம் விட்டு ஓராண்டு முடிந்த நிலையிலும் பணி தொடங்கப்படா மல் உள்ளது. அந்தப் பணி எப்போது துவங்கும்?  எஞ்சிய சாலைகளுக்கு எப்போது ஒப்பந்தம் கோரப்படும்? விம்கோ ரயில் நிலைய இணைப்புச் சாலையின் ஒருபகுதியில் தார்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மறுபகுதி வெட்மிக்ஸ் மட்டும் போட்டு அப்படியே உள்ளது. அந்தப் பணி எப்போது நிறைவு பெறும்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, திருவீதியம்மன் நகர் 5வது தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நிறை வடைந்தவுடன், தார்ச் சாலை அமைக்கப்படும். ரயில் நிலைய இணைப்புச் சாலையில் பள்ளமாக இருந்ததால் வெட்மிக்ஸ் கொட்டி போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக செப்பனிடாத 70 சாலைகளை கண்டறியப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகிறது என்றார். துணைக் கேள்வி எழுப்பிய உறுப்பினர் ஜெயராமன், ரயில் நிலைய இணைப்புச் சாலையை முழுமையாக ஒப்பந்ததாரர் முழுமையாக அமைக்காமல், பாதியில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். மேயருக்கு அதிகாரிகள் தவறான தகவலை கொடுக்கிறார்கள். அதிகாரிகள் உண்மை நிலையை அறிவிக்க வேண்டும் என்றார்.