சென்னை, செப். 7- சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டி ருந்த பெண்ஆயுள் தண்டனைக் கைதி இறந்தார். சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (எ) சாயிரா பானு (64). அவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் பெண்கள் சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டி ருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாயிரா பானுவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அந்த தண்டனையை சாயிரா பானு அங்கு அனுபவித்து வந்தார். இந்நிலையில் அண்மையில் சாயிரா பானுக்கு சிறுநீரகம் செயலிழந்ததால், அதற்கு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இது குறித்து புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.