மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர்களின் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.