கலை-இலக்கியப் பெருமன்றத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் எல்லை. சிவக்குமார் இல்லத் திருமண விழா சாய்பாபா திருமண மண்டபத்தில் சனிக்கிழமை (நவ.9) நடைபெற்றது. விழாவில் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று மண மக்கள் மீனா அமர்ஜித்- விஜய் ஆகியோரை வாழ்த்தினார். அப்போது தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.2 ஆயிரத்தை ஜி. ராமகிருஷ்ணனிடம் மணமக்கள் வழங்கினார்கள். விழாவில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், சிபிஎம் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், மூத்த தலைவர் முருகன், சிபிஐ நிர்வாகி சேது செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.