districts

img

பரிசு கூப்பன் பெற முடியாமல் தவிக்கும் புதுச்சேரி கட்டிட தொழிலாளர்கள்

புதுச்சேரி, ஜன. 16- வாரியத்தால் அறிவிக்கப்பட்ட பரிசு கூப்பன் பெற முடியாமல் புதுச்சேரி கட்டிட தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். புதுச்சேரி அரசின் கட்டுமான நல வாரியத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். ஆண்டுதோறும் கட்டுமான தொழிலாளர்களுக்கு பண்டிகை கால உதவித்தொகை வழங்க வேண்டும் என்று சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அரசிடம் வலியுறுத்தியது. அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி கட்டிட நலவாரியம் சார்பில் கட்டிட தொழி லாளர்களுக்கு பண்டிகைக்கால பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 2021 அக்டோபர் இறுதியில் புதுச்சேரி முதல்வர் ரங்க சாமி கட்டிட தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு தீபாவளி பண்டி கையை முன்னிட்டு  ரூபாய் 3,000  பரிசுக் கூப்பன் வழங்கப்படும் என அறிவித்தார் . இரண்டு மாதங்கள் முடியும் நிலையில் 200க்கும் மேற்பட்ட கட்டிடத்  தொழிலாளர்கள் பரிசு கூப்பன் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஊழியர் ஒருவர் விடுமுறையில் சென்று விட்டதால் கையொப்பம் பெற முடிய வில்லை என்று கூறப்படுகிறது.  கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் தங்களது அன்றாட வருமானத்தை இழந்து பரிசு கூப்பன் பெறுவதற்காக வாரம் ஒரு முறை தட்டாஞ்சாவடியில் உள்ள வாரிய அலுவலகத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். எனவே மாற்று வழிகளை கண்டறிந்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும். மேலும், அமுதசுரபி உள்ளிட்ட அரசு அங்காடிகளில் 3 ஆயிரத்திற்கு பெருமானமுள்ள குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இருப்பில் இல்லை  என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அரசு இதை கணக்கில் கொண்டு தொழி லாளர்களுக்கு தேவைப்படும் தரமான அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கட்டுமான தொழிலாளர்களின் குரலாக உள்ளது.