சென்னை, ஜன. 29- திருவொற்றியூர் காலடிப்பேட்டை அருகே ரேசன் கடை செயல்பட்டு வந்தது. இந்த ரேசன் கடையில் ஒண்டிக்குப்பம், திருச்சினாங்குப்பம் மக்கள் ரேசன் பொருட்களை வாங்கி வந்தனர். இங்கு1,500 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கடையை தற்போது மாட்டு மந்தை பகுதிக்கு உணவு வழங்கல் துறை மாற்றியதாக தெரிகிறது. ஏற்கெனவே நீண்ட தூரத்தில் இருக்கும் கடை, தற்போது மேலும் நீண்ட தூரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர். இந்நிலையில் திங்களன்று (ஜன. 29) ஏராளமான பெண்கள் உணவு வழங்கல் துறை அலுவலகத்தை முற்று கையிட்டு ரேசன் கடையை தங்கள் ஊரிலேயே அமைக்கும் படி கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு அதிகாரிகளுடன் பேசி விரைவில் நல்ல முடிவு எடுப்பதாகக் கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.