திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்சாலை வேண்டாம் என்று அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது, காவல்துறை பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, குண்டர் சட்டத்தில் கைது செய்த விவசாயிகளுக்கு ஆதரவாகவும், நில ஒருங்கிணைப் புச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநிலத் தலைவர் வேலுச்சாமி, மாநில பொருளாளர் ராஜேஷ், மாவட்டத் தலைவர் கவியரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாக்கடை புருஷோத்தமன் நன்றி கூறினார்.