அரசு போக்குவரத்து கழகத்தில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கி கழக வருவாய் அனைத்தையும் தனியாருக்கு வாரி வழங்கும் முடிவை கைவிடக் கோரியும், போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்கும் முடிவை திரும்ப பெற வலியுறுத்தியும் வேலூர், திருப்பத்தூர் பணிமனைகள் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தலைவர் ஜி.சஞ்சீவி, ஏ.பூபதி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், சங்க பொதுச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், திருப்பத்தூர் நகர சிஐடியு அமைப்பாளர் கேசவன், மண்டல துணை பொதுச் செயலாளர் எஸ்.சுரேஷ், பொருளாளர் எஸ்.முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.