districts

img

8 ஆவது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும்

வேலூர், செப். 29 - ஒன்றிய அரசு 8 வது மத்திய ஊதியக் குழு காலதாமதமின்றி உடனடியாக நிய  மிக்க வேண்டும் என்று அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் மற்றும் பன்திறன் ஊழி யர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன் தலைமை வகித்தார். வரவேற்புக் குழு தலைவர் திருமகன் வரவேற்றார். அஞ்சல் ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளர் கே.ராகவேந்திரன் துவக்கி வைத்து பேசினார். அகில இந்திய பொதுச்செயலாளர் ஆர்.பி.சரங் வேலைகள் மற்றும் எதிர்கால பணிகள் குறித்து பேசினார். சங்கத்தின் முன்னாள் உதவி பொதுச்செயலாளர் டி.பி.மொஹந்தி பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.  இக்கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கூடுதல் பணி கடமை படி ரூ.94 -லிருந்து உயர்த்தி வழங்க வேண்டும். அஞ்சல் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.25,500 ஆக உயர்த்த வேண்டும். சீருடை உதவித்தொகை ரூ.15,000 ஆக உயர்த்த வேண்டும். நோடல் டெலிவரி சென்டர் என்ற பெயரில் தபால் காரர்களிடம் அதிக வேலை வாங்குவதை கைவிட்டு நோடல் பார்சல் டெலிவரி மையம் உடனடியாக மூட வேண்டும் அல்லது அதற்கு ஏற்ப கூடுதல் மற்றும் போதுமான பணியாளர்கள் அமைக்க வேண்டும். அஞ்சல் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். மேலும் சிஎம்சி மருத்துவமனையில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ வழங்க அனுமதி பெற்று தர வேண்டும். வேலூரில் கேந்திர வித்யாலயா பள்ளி துவக்க வேண்டும். பணியில் இருக்கும் போது ஊழியர் மரணம் அடைந்தால், பண இழப்பீடு தற்போது உள்ள ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.