districts

img

சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம்

செங்கல்பட்டு, டிச.2 செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப் பாக்கம் முருங்கை ஊராட்சிக்குட்பட்ட 6வது வார்டில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறாவது வார்டில் மாரியம்மன் கோயில் தெரு மற்றும் அம்பேத்கார் தெருக்களில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தத் தெருகளின் சாலை சுமார் 10 ஆண்டு களுக்கு முன் போடப்பட்ட தாகும். தற்போது இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பள்ளங்களில் மழை நீர் தேங்கி, சேறும், சகதியுமாக நிற்கிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், வயதான முதியவர்கள் பாதையின் தடம் தெரியாமல், சேற்றில் விழுந்து விடுகின்றனர்.  இந்த பகுதியில் உள்ள 2 தெருக்களில் சிமெண்ட் சாலை அமைத்து தரக் கோரி கிராம சபை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சேறும், சகதியுமாக உள்ள சாலையில், நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து சாலையை சீரமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.