திருவண்ணாமலை,நவ.21- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்கொவளைவேடு கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய நடைபயணம் மூலம் குடிமனைப்பட்டா பெற்றனர். அதனைத் தொடர்ந்து, வீடு கேட்டு வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. கட்சியின் வந்தவாசி வட்டார செயலாளர் அ.அப்துல் காதர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், வந்தவாசி இடைக்குழு உறுப்பினர் மோகன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து, கட்சியின் பெரணமல்லூர் ஒன்றிய இடைக்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோருடன் 23 பழங்குடியினர் குடும்பங்கள் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் பாபுவிடம் மனு அளித்தனர்.