districts

img

இந்திய அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு பரப்புரை மக்கள் ஒற்றுமை மேடை

விழுப்புரம் மாவட்டத்தில் குடிமை இந்திய அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு பரப்புரை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சனிக்கிழமையன்று  5 மையங்களில் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு எஸ்.வேல்மாறன் தலைமை தாங்கினார், தமுமுக மாவட்ட செயலாளர் ஏ.ஜாமியாலம் ராவுத்தர் வரவேற்று பேசினார். திமுக மத்திய மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கா.அஸ்கர் அலி, சிபிஎம்  மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், விசிக மாவட்ட செயலாளர் ர.பெரியார், சிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் ஆ.சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் க.பொன்முடி சிறப்புரையாற்றினார்.  ஆர் ராமமூர்த்தி(சிபிஎம்),  முஸ்தகீதின் (தமுமுக), எம்.டி.குலாம் மொய்தீன்(காங்கிரஸ்), ஆர்.ஜனகராஜ், ஆர்.சக்கரை,  (திமுக),  சமூக ஆர்வலர் அன்பரசி ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.