districts

img

தண்டராம்பட்டில் மக்கள் சந்திப்பு இயக்கம்

திருவண்ணாமலை, ஜன.2-  சாதியம் தகர்ப்போம், மனிதம் வளர்ப்போம் என்ற முழக்கத்துடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதிய அடக்குமுறை நிறைந்த பகுதியான தண்டராம்பட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. 2025 புத்தாண்டில் மாநில மாநாடு,அகில இந்திய மாநாடுகள் என உற்சாகமான பணிகளோடு, சாதி,மத பேதமில்லா  சுரண்டலற்ற சமூகம் படைத்திடவும் நடத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் மக்களிடம் பிரச்சாரம் நடத்தப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ப. செல்வன், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், எஸ். ராமதாஸ், ஏ. லட்சுமணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர். அண்ணாமலை, சிஎம். பிரகாஷ் வட்டார செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் ஆர். ரவி, குபேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.