திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட வைரவன் குப்பம் கடற்கரைப் பகுதியில் பனைவிதை நடு விழா நடைபெற்றது. இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை நிர்வாகி ஏகாட்சரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன் கலந்துகொண்டு பனை விதைகளை நடவு செய்தார். அவருடன் வைரவன் குப்பம் கூட்டுறவு சங்க தலைவர் ஞானமூர்த்தி,பழவேற்காடு வார்டு உறுப்பினர் ஹாரூன் மற்றும் மகளிர் குழுவினர் பலர் உடன் இருந்தனர்.