districts

img

நெய்வேலியில் அணுமின் நிலையம் கட்ட எதிர்ப்பு

கடலூர், மார்ச் 9- நெய்வேலியில் அணுமின் நிலையத்தை கட்டுவதற்கு அனு மதிக்க கூடாது என வலியுறுத்தி கடலூரில் அனைத்து குடி யிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கடலூர்-புதுச்சேரி இருப்பு பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், இயற்கை பேரிடர் மாவட்டமாக இருப்பதால் கடலூரில் குடி யிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி அளிக்க கூடாது, கர்நாடக அரசு  காவிரியில் மேகதாது அணை  கட்ட அனுமதிக்க கூடாது,  ஆந்திரா அரசு பாலாற்றில் அணை கட்டு வதை தடுக்க  வேண்டும், கடலூர் புறவழிச் சலை மற்றும் வி.கே.டி தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கடலூரில் அனைத்து  குடியிருப்போர் நலச்சங்கங் களின் கூட்ட மைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தலைவர் பாலு பச்சையப்பன் தலைமை தாங்கினார். ஆலோசகர்கள் கிருஷ்ண மூர்த்தி, சிவராமன், புருஷோத்த மன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பொது செயலாளர் எஸ்.கே.தேவநாதன் வர வேற்றார். பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தொடக்க உரை யாற்றினார். சிறப்பு தலை வர் எம்.மருதவாணன் நிறை உரையாற்றினார். முன்னதாக கடலூர் மாநகர அனைத்து பொதுநல இயக்கங்க ளின் கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் ரவி, தனியார் பேருந்து தொழிலாளர் சங்கம் குரு ராமலிங்கம், மீனவர் பேரவை சுப்புராயன், பொரு ளாளர் பி.கே.வி.ரமணி ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.