districts

மேலக்கோட்டையூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு: தொடர் போராட்டம் நடத்த தயாராகும் மக்கள்

செங்கல்பட்டு, அக்.4- செங்கல்பட்டு மாவட்டம், வண்ட லூர் வட்டம், மேலக்கோட்டையூர் ஊராட்சியில் ராஜீவ் காந்தி நகரில் கடந்த  50 ஆண்டுகளுக்கு மேலாக 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் தாம்பரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி  வருகின்றனர். இதே பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கையகப்படுத்தப்பட்டு தமிழ்நாடு காவல்துறையின் குடும்பத்தினருக்கு சுமார் 2763 வீடுகள் அடுக்குமாடி கட்டடங்களாக கட்டப்பட்டு காவலர் களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வசித்து வருகின்றனர். இதன் அருகில்  தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக் கழகத்திற்கு சுமார் 125 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் ஒன்றிய அரசாங்கத்தின் தொழில்நுட்பக் கல்லூரிக்கு சுமார் 100 ஏக்கரும்,  காவலர் பொது பள்ளிக்கு சுமார் 30  ஏக்கர் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கி காலியாக உள்ள இடங்களில் விளை யாட்டு திடல் அரசு மருத்துவமனை விளையாட்டு பூங்கா உள்ளிட்டவை களை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரி  வருகின்றனர்  மேலும் கடந்த 2000 ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சி யில் சுமார் 150 குடும்பங்களுக்கு பட்டா  வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டா வினை அடங்கலில் ஏற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர் இதனைத் தொடர்ந்து தற்போது மாவட்ட நிர்வாகம், வண்டலூர் வட்டம்,  மேல கோட்டையூர் ஊராட்சி ராஜீவ் காந்தி நகர் புஞ்சை தரிசு சர்வே எண் 171 இல் சுமார் 6 ஏக்கர் குடிசை  மாற்று வாரியத்திற்கு கையகப்படுத் தும் பணியை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் இப்பகுதி மக்கள் தங்கள் வாழ் விடம் பறிபோகுமோ என்ற அச்சத்தில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக  அரசு அலுவலர்கள் குடிசை மாற்று வாரியத்திற்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு இடத்தை அளவீடு செய்ய வந்தபோது அப்பகுதி மக்களும் காவலர் குடியிருப் பில் உள்ள குடும்பங்களும் எதிர்ப்பு  தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் இத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தும் திட்டமிட்டு வருகின்றனர். இதுகுறித்து சிபிஎம் வண்டலூர், காட்டாங்குளத்தூர் பகுதி செயலாளர் சேஷாத்ரியிடம் கேட்டபோது, கலை ஞர் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட தற்காலிக குடிமனை பட்டாவை உடனடியாக கிராம அடங்களில் ஏற்றி அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிசை மாற்று வாரியத் திற்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு எடுக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் உள்ளுர் மக்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், விளையாட்டு திடல், சமுதாயக்கூடம், உள்ளிட்ட வசதிகளை  செய்து தர வேண்டும் என தெரிவித் தார்.