districts

img

குடும்ப நல மருத்துவர் ஆலோசனை கிளினிக் திறப்பு

சென்னை, ஜூலை 12 சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை  அதன் ஓராண்டு விழாவை கொண்டாடும் வகையில்  குடும்பங்களுக்கு குறைந்த கட்டணங்களில்  முழுமையான சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் “ஃபேமிலி கிளினிக்கை” தொடங்கியுள்ளது.  இந்த புதிய ஃபேமிலி கிளினிக்கில் சிறார்கள் முதல், முதி யவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் முந்தைய காலத்தை போன்று குடும்ப நல மருத்துவரின் விரிவான சேவை கிடைக்கும். உடல்நலப் பரிசோதனைகள், தடுப்பூசி மருந்துகள் மற்றும் நோயறிதலுக்கான பரிசோதனைகள் போன்ற முன்தடுப்பு சுகாதார சேவைகள், நோய்கள் வராமல் தடுப்பதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று மருத்து வமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்த் செல்வராஜ்  கூறினார். இந்த கிளினிக்கை வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதிவீராசாமி தொடங்கிவைத்தார். அவர் பேசுகையில் இத்தகைய கிளினிக்குகள் பெரிய மருத்து வமனையின் ஒரு அங்கமாக இல்லாமல் மக்கள் எளிதாக வந்து  செல்லும் வகையில்  ஆங்காங்கே சிறிய அளவில் தொடங்க ப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். காலை 8 மணி முதல் இரவு 8  மணி வரை செயல்படும் இந்த ஃபேமிலி கிளினிக், ரூ.200 என்ற மிகக்குறைவான கட்ட ணத்தில் மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசனையை வழங்கும். இந்த நிகழ்ச்சியில்    டாக்டர். சுஜாதா,  டாக்டர். வைபவ் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.