வேலூர். மே 9 - வேலூர் நறுவீ மருத்துவமனையில் புதிய தாக ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கவாத நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு விழா மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் தலைமையில் நடை பெற்றது. சிகிச்சை மையத்தை திறந்து வைத்து அசாம் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா பேசுகையில், இந்த சிகிச்சை மையத்தை திறந்து வைக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த மருத்துவமனை தலை வர் ஜி.வி.சம்பத்துக்கு எனது நன்றையை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு நவீன தொழில்நுட்ப சாதனங்களுடன் உலக தரத்தில் மருத்துவ சேவை வழங்கப் படுவதை கேட்டு அறிந்தேன். எங்களது ராஜஸ்தான் மாநிலத்தில் இது போன்ற சிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவ மனைகள் இல்லை. ஒவ்வொரு மனிதனும் நேர்மையை கடைபிடித்து சமுதாய முன்னேற்றத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் அசாம் மாநில ஆளுநரின் துணைவியார் அனிதா கட்டாரியா, செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அர விந்தன் நாயர், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், பக்கவாத நோய் சிகிச்சை மைய தலைவர் டாக்டர் சிற்றம்பலம், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நிதின் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.