புதுச்சேரி, மே 17-
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இந்நிலை யில் காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியரும், கலால்துறை அதிகாரியுமான ஜான்சன், வட்டாட்சியர் மதன்குமார் ஆகியோர் மாவட்டம் முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், பார்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட சாராயக் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, மதுபானக் கடை மற்றும் சாராயக்கடைகளில் காலாவதியான மது பாட்டில்கள் உள்ளதா?, மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரி கள் சோதனை செய்தனர்.
மேலும் முறையாக கணக்குகளை பராமரிக்காத மதுபான கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க துணை ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், காரைக்கால் பகுதியில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்தப்படுவதை எல்லையோரங்களில் கண்காணிக்கவும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தும் மதுபான கடைகளுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.