பழங்குடியின மக்களை தரையில் அமர வைத்து அவமதிப்பு செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கொட்டும் மழையிலும் புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி தலைவர் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வழக்கறிஞர் சரவணன், நிர்வாகிகள் ஹரிகிருஷ்ணன், குப்புசாமி, அகில இந்திய விவசாயிகள் சங்க செயலாளர் சங்கர், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க செயலாளர் தமிழ்ச்செல்வன், பழங்குடியினர் சங்க செயலாளர் ஏகாம்பரம், சிஐடியு மாநில இணைச் செயலாளர் மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.